Published : 06 Dec 2018 08:34 AM
Last Updated : 06 Dec 2018 08:34 AM

புயல் பாதிப்பு தொடர்பான புகைப்பட ஆதாரம் இல்லை என நிவாரண பொருளை திரும்ப அனுப்ப கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

புயல் பாதிப்பு தொடர்பான புகைப் படம் இல்லை என்பதற்காக நிவாரணப் பொருட்களை திரும்ப அனுப்பக் கூடாது என உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

புயல் நிவாரணம் தொடர்பாக வழக்கறிஞர் பி.ஸ்டாலின், திரு முருகன், தங்கவேல் உட்பட பலர் உயர் நீதிமன்றக் கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் ஏற்கெனவே விசார ணைக்கு வந்தபோது, இடைக்கால நிவாரணம் வழங்குவது தொடர் பாக உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது. அவற்றை நிறைவேற்றியது தொடர் பாக அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை யைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர், ‘புயல் பாதிப்பு தொடர்பான புகைப் பட ஆதாரம் இல்லை என்பதற்காக வீடுகள் சேதம் மற்றும் ஆடு, மாடு கள் உயிரிழந்ததற்கான நிவாரணம் வழங்கப்படவில்லை. அவர்களுக் கான நிவாரணப் பொருட்கள் திரும்ப அனுப்பப்படுகின்றன. நிவா ரணப் பொருட்களை திரும்ப அனுப் பக்கூடாது' என உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்தார்.

திருச்சி திருவெரும்பூரைச் சேர்ந்த எம்.எழிலன், கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அறிக்கை வெளியிடவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக அரசு ஒதுக்கி யுள்ள நிவாரண நிதியை ரூ.40 கோடி யில் இருந்து ரூ.300 கோடியாக உயர்த்தி உத்தரவிட வேண்டும் என மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, மத்தி யக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்துக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.353.70 கோடி ஒதுக்கப்பட்டுள் ளது என்றார். தமிழக அரசு வழக் கறிஞர் வாதிடும்போது, 'மின்பாதை சீரமைப்புக்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பிற மாநில, மாவட்டப் பணியாளர்களும் மின் விநியோகத்தைச் சீரமைக்கும் பணி யில் ஈடுபட்டுள்ளனர். ஒரு வாரத் தில் மின் சேவை முழுமையடையும். புயல் பாதித்த பகுதிகளில் நூறு சதவீத குடிநீர் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

நீதிமன்ற உத்தரவு அடிப்படை யில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப் படுகின்றன. புயலால் பாதிக்கப் படாதோருக்கு நிவாரணம் வழங்கக் கூடாது என்பதற்காக புகைப்பட ஆதாரம் கேட்கப்படுகிறது. பயிர்க் காப்பீட்டுக்கு பதிவு செய்வதற்கான காலத்தை நீட்டிக்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது' என்றார்.

இதையடுத்து, சேதம் தொடர் பான புகைப்பட ஆதாரம் இல்லை என்பதற்காக நிவாரணப் பொருட் களை திருப்பி அனுப்பக்கூடாது. கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தி, புயல் சேத விவரங்களைச் சேகரிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை டிச.12-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x