Published : 06 Dec 2018 08:30 AM
Last Updated : 06 Dec 2018 08:30 AM
வாகன ஓட்டிகள் அசல் அல்லது டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவால், இதுதொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
வாகன ஓட்டிகள் தங்களது அசல் ஓட்டுநர் உரிமத்தை வாகன சோதனையின்போது காண்பிக்க வேண்டும் என தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவித்திருந்தது.
இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஒரே தவறை 3 முறைக்கு மேல் செய்தால் மட்டுமே அசல் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய முடியும். எனவே தற்போது வாகன சோதனையின் போது அசல் ஓட்டுநர் உரிமம் கோருவது ஏற்க முடியாது என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் வினீத் கோத் தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது லாரி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இதுதொடர்பாக கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தையோ அல்லது டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தையோ கட்டாயமாக தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது” என்றார்.
அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட் டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT