Last Updated : 21 Nov, 2018 12:26 PM

 

Published : 21 Nov 2018 12:26 PM
Last Updated : 21 Nov 2018 12:26 PM

கள்ளக்குறிச்சி அருகே ரயில்வே மேம்பால தடுப்புச்சுவரில் கார் மோதி விபத்து; விஞ்ஞானி  உட்பட 4 பேர் பலி

கள்ளக்குறிச்சி அருகே ரயில்வே மேம்பால தடுப்புச்சுவரில் கார் மோதியதில் விஞ்ஞானி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றுபவர் தேவநாதன் (50). இவர் தன் மனைவி மாலினி (47), மகள் ரம்யா (25) ஆகியோருடன் கார் ஒன்றில் இன்று காலை சேலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தார். காரை கல்பாக்கம், ஹாஜா நகரைச் சேர்ந்த பசூல் ரஹ்மான்(40) ஓட்டிச் சென்றார்..

கள்ளக்குறிச்சி அருகே சின்ன சேலம் ரயில்வே மேம்பாலத்தில் கார் செல்லும்போது மேம்பால பக்கவாட்டின் தடுப்புச்சுவரில் கார் மோதியதில் காரில் சென்ற தேவநாதன் குடும்பத்தினர் மற்றும் ஓட்டுநர் உட்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து சின்ன சேலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x