Published : 15 Oct 2018 10:40 AM
Last Updated : 15 Oct 2018 10:40 AM
பொள்ளாச்சி அருகே எதிர்ப்பையும் மீறி காதலனுடன் மகள் சென்றுவிட்டதால், மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்துகொண்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
பொள்ளாச்சி - பாலக்காடு சாலை சக்தி கார்டன் பகுதியைச் சேர்ந்த விவசாயி அகத்தூர்சாமி (63), இவரது மனைவி சொர்ணலதா (50). இவர்களுடைய மகள் சினேகா (23), சிவகாசியில் உள்ள கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வந்தபோது இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
இதை அறிந்த பெற்றோர், சினேகாவைக் கண்டித்ததுடன் கோவையில் உள்ள கல்லூரியில் சேர்த்துள்ளனர். இந்நிலையில், காதலித்தவரை திருமணம் செய்துகொள்வதாக சினேகா தெரிவித்துள்ளார்.
இதை பெற்றோர் ஏற்காததால், வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இதனால், மனமுடைந்த பெற்றோர், நேற்று முன்தினம் மாலை விஷ மாத்திரை சாப்பிட்டுள்ளனர். பின்னர், அங்கலக் குறிச்சியில் உள்ள அகத்தூர்சாமியின் தங்கை தனலட்சுமிக்கு சொர்ணலதா போன் செய்து விஷம் அருந்திய தகவலை தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அகத்தூர்சாமி உயிரிழந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சொர்ணலதா, நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
சினேகாவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதால், பெற்றோர்கள் உயிரிழந்த தகவலை தெரிவிக்க முடியவில்லை என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT