Published : 22 Sep 2018 10:42 AM
Last Updated : 22 Sep 2018 10:42 AM

ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல்: பதுக்கி விற்பனை செய்த சகோதரர்கள் கைது

குரோம்பேட்டை அருகேயுள்ள நெமிலிச்சேரியில் குடோன் வைத்து குட்கா விற்பனை செய்வதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படையினர் சிட்லபாக்கம் போலீஸ் நிலைய கட்டுபாட்டில் உள்ள நெமிலிச்சேரி ஆர்.கே. நகர், நர்மதா தெருவில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது ரூ.25 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் அங்கு இருப்பதை கண்டு பிடித்து குடோனில் இருந்த முத்துராஜ் (31) அவரது சகோதரர் முத்துசுதாகர் (26) ஆகியோரை பிடித்து சிட்லபாக்கம் போலீஸில் ஒப்படைத்தனர்.

இது குறித்து போலீஸார் கூறிய தாவது: தனிடையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படை யில் நெமிலிச்சேரியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விசார ணையில் நெல்லை மாவட்டம் உவரியைச் சேர்ந்த முத்துராஜூம் அவரது சகோதரர் முத்து சுதா கரும் நெமிலிச்சேரியில் குளிர் பானங்கள் மற்றும் தண்ணீர் கேன்கள் சப்ளை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். குளிர்பானங் கள் சப்ளை செய்த போது அதில் போதிய லாபம் இல்லாத தால் நண்பர் ஒருவர் மூலம் குட்கா விற்பனையை தொடங்கியுள்ள னர். தண்ணீர் கேன்கள் சப்ளை செய்யும் வாகனங்களில் குட்கா பொருட்களையும் மறைமுகமாக ஏற்றி கடைகளில் சப்ளை செய்து வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x