Published : 21 Sep 2018 09:03 PM
Last Updated : 21 Sep 2018 09:03 PM

திருமணமான ஒரு மாதத்தில் 3 லட்சம் மதிப்புள்ள நகைகளுடன் மணமகள் ஓட்டம்: புரோக்கர் மீது மாப்பிள்ளை புகார்

திருமணமான ஒரு மாதத்தில் தனது மனைவி 3 லட்சம்ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடித்ததாக பாதிக்கப்பட்ட கணவர் திருமண புரோக்கர் மீது புகார் அளித்துள்ளார்.

கொண்டித்தோப்பு பாஷ்யகாரலு தெருவில் வசிப்பவர் ஆனந்த் ஜெயின் (43). இவர் திருமணம் செய்வதற்காக பல இடங்களில் பெண் தேடினார். இதற்காக கடந்த மாதம் திருமண கொடுங்கையூரைச் சேர்ந்த புரோக்கர் லட்சுமி என்பவரை அணுகினார். அவரும் ஆனந்த் ஜெயினுக்கு ஏற்றார்போல் ஜெயஸ்ரீ என்ற அழகான பெண்ணைக் காட்டினார்.

பெண்ணைப் பார்த்த ஆனந்த் ஜெயினுக்குப் பிடித்துபோனது. பெண்ணின் பூர்வீகம் பூனா. கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி பெற்றோர், உறவினர்கள் முன்னிலையில் யானைக்கவுனியில் உள்ள திருமண மண்டபத்தில் விமரிசையாக திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பின் தனது பெற்றோருடன் ஆனந்த் ஜெயின் வசித்தார். புரோக்கர் லட்சுமிக்கு புரோக்கர் கமிஷன் 2.5 லட்சம் பேசியதில் 50 சதவிகிதம் பணத்தைக் கொடுத்திருந்தார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் ஆனந்த் ஜெயின் வேலைக்குக் கிளம்பினார்.

வேலைக்குச் சென்ற நேரத்தில் மதியம் 3.30 மணி அளவில் மணமகள் ஜெயஸ்ரீ வீட்டில் ஆனந்த் ஜெயினின் பெற்றோர் உறங்கிய நிலையில் வீட்டிலிருந்த ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணம், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள நகைகளைக் எடுத்துக் கொண்டு மாயமானார்.

வீட்டுக்கு வந்த ஆனந்த் ஜெயின் மனைவியைக் காணாமல் தேடினார். இரண்டு நாட்களாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் புரோக்கர் லட்சுமி மீது கொத்தவால்சாவடி போலீஸில் புகார் அளித்துள்ளார். கொத்தவால்சாவடி போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x