Published : 19 Sep 2018 05:29 PM
Last Updated : 19 Sep 2018 05:29 PM

பாடநூல் நிறுவனம் உட்பட தமிழகத்தில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள் திடீர் மாற்றம்

பாடநூல் நிறுவன மேலாண் இயக்குனர் உட்பட பல்வேறு துறைகளில் பொறுப்பு வகிக்கும் 9 ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

1. நில மேலாண்மை இணை ஆணையராகப் பதவி வகிக்கும் விஜயாராணி வேளாண்துறை கூடுதல் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

2. தர்மபுரி மாவட்ட சர்க்கரை கூட்டுறவு ஆலை மேலாண் இயக்குனராகப் பதவி வகிக்கும் கற்பகம் நில மேலாண்மை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

3. சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை கூடுதல் செயலாளராகப் பதவி வகிக்கும் பிங்கி ஜோவல் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் கூடுதல் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

4. வணிகவரித்துறை கூடுதல் ஆணையராகப் பதவி வகிக்கும் பாலாஜி டெல்டா மாவட்ட பொதுப்பணித்துறை கூடுதல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

5. நில மேலாண்மை இணை ஆணையராகப் பதவி வகிக்கும் மேகநாத ரெட்டி வணிகவரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

6. தமிழ்நாடு பாடநூல் வாரிய மேலாண் இயக்குனராகப் பதவி வகிக்கும் ஜெகந்நாதன் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

7. சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராகப் பதவி வகிக்கும் அதுல் ஆனந்த் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

8. வேளாண் துறை கூடுதல் இயக்குனராகப் பதவி வகிக்கும் குமாரவேல் பாண்டியன் சென்னை மாந்கராட்சியின் கல்வித்துறை துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

9. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குனராகப் பதவி வகிக்கும் வெங்கடாச்சலம் பாடநூல் நிறுவன மேலாண் இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

10. சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகிக்கும் மதிவாணன் கூடுதல் பொறுப்பாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை நிர்வகிப்பார்.

11. விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் பதவி வகிக்கும் ரீட்டா ஹரீஷ் தாக்கூர் சர்க்கரை கழக ஆணையரக மாற்றப்பட்டுள்ளார்.

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x