Published : 11 Sep 2018 09:43 AM
Last Updated : 11 Sep 2018 09:43 AM
சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற துப்புரவு தொழிலாளர் முதல் மாத ஓய்வூதித்தை கேரளா நிவாரண நிதிக்கு வழங்கினார்.
சிதம்பரம் நகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றியவர் நாகராஜ். இவர் கடந்த 2016-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இவர் கடந்த மாதம் முதல் மாத ஓய்வூதியமாக ரூ.10 ஆயிரம் பெற்று வருகிறார். முதல் ரூ.10 ஆயிரத்தையும் கேரள வெள்ள நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவு செய்தார். இதனையடுத்து அவர் ரூ.10 ஆயிரத்தை நேற்று முன்தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசாவிடம் வழங்கினார். மாநிலக்குழு மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜா, வாஞ்சிநாதன், நகர்குழு உறுப்பினர் சங்கமகேஸ்ரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT