Published : 02 Sep 2018 04:39 PM
Last Updated : 02 Sep 2018 04:39 PM

யாருக்கும் பயந்து அதிமுக அரசியல் செய்யவில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

யாருக்கும் பயந்து அதிமுக அரசியல் செய்யவில்லை என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசத்துடன் பேசினார்.

சிவகாசியில் நேற்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ''யாருக்கும் பயந்து அதிமுக அரசியல் செய்யவில்லை. அதிமுகவினர் யாருக்கும் பணிந்தவர்கள் அல்ல. ஒரு சந்தர்ப்பத்தில் உதவி செய்தார்களே என்றுதான் நன்றிக்கடனுடன் பார்க்கிறோம். ஆனால், அதிமுகவை ஏளனமாகப் பார்ப்பவர்களை எதிர்க்கத் தயாராக இருக்கிறோம்.

முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கட்டளையிட்டால் யாரை வேண்டுமானாலும் எதிர்க்க அதிமுகவினர் தயார். காலம் காலமாக திமுகவையும், கருணாநிதியையும் எதிர்த்துப் பழக்கப்பட்ட அதிமுக தொண்டர்களுக்கு நேற்று வந்தவர்கள் எம்மாத்திரம்'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

டிடிவி தினகரன் ஒரு கருத்தைக் கூறுவதும், அதற்கு மறுப்பு தெரிவித்தும், எதிர்த்தும் அதிமுக அமைச்சர்கள் கருத்து சொல்லி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் தினகரன் பெயரைக் குறிப்பிடாமல், மறைமுகமாக அவரை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கிப் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x