Published : 02 Sep 2018 04:19 PM
Last Updated : 02 Sep 2018 04:19 PM
டிடிவி தினகரனுடன் பாமக கூட்டணி வைக்குமா என்பதை தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்ய முடியும் என்று அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு இன்று பேட்டி அளிக்கும் போது அன்புமணி கூறுகையில், ''எங்கள் கட்சியின் வயது 30. தமிழகத்தைப் பொறுத்தவரையில் திமுக, அதிமுகவுக்குப் பிறகு நாங்கள்தான் இருக்கிறோம். எங்களுக்கு ஒரு அனுபவம் உள்ளது. போராடத் தன்மை இருக்கிறது. எங்களுக்கு ஆதரவாக மக்கள், இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்த சூழலில் தினகரனுடன் எங்கள் கட்சியை ஒப்பிடுவது தேவையில்லாதது.
மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதிமுக இன்று ஆட்சியில் உள்ளது. தினகரன் ஆட்சியில் இல்லை. எங்களின் அரசியல் வியூகம் என்ன என்பதை தேர்தல் அறிவிப்புக்குப் பிறகே வெளிப்படுத்துவோம். இல்லையென்றால் தேர்தல் நெருக்கத்தில் முடிவெடுப்போம்.
தேர்தலைப் பொறுத்தவரையில் மக்களவைத் தேர்தல் மட்டும் வருகிறதா அல்லது சட்டப்பேரவைத் தேர்தலும் வருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டியதாக உள்ளது'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT