Published : 02 Sep 2018 12:11 AM
Last Updated : 02 Sep 2018 12:11 AM

கெலவரப்பள்ளி அணையில் செல்பி எடுத்தவர் தவறி விழுந்து மரணம்; காப்பாற்றச் சென்ற கல்லூரி மாணவரும் இறந்தார்

கர்நாடக மாநிலம் பெங்களூரு ராஜேஸ்வரி நகரைச் சேர்ந்தவர் தேவேந்திரா (21). இவர் ஓசூரில் உள்ள பேகேப்பள்ளி பகுதியில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

நேற்று  மின்தடை காரணமாக பணியில்லாமல் இருந்த தேவேந்திரா, தன்னுடன் பணியாற்றும் இரு நண்பர்களுடன் கெலவரப்பள்ளி அணையை சுற்றிப்பார்க்கச் சென்றார். கெலவரப்பள்ளி அணை மதகுகளில் இருந்து  வெளியேறும்  தண்ணீர் முன்பு நின்று கொண்டு தேவேந்திரா உட்பட 3 நண்பர்களும் செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது தேவேந்திரா மற்றும் அவரது நண்பர் ஒருவர் நிலை தடுமாறி மதகில் இருந்து வெளியேறும் தண்ணீரில் விழுந்தனர். அணைக்கு சுற்றுலா வந்திருந்த ஓசூர் தனியார் பொறியியல்கல்லூரியில் பிஇ இறுதியாண்டு படிக்கும் காரைக்குடியைச் சேர்ந்த கேசவன் (21), நீரில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார்.  இதில் ஒருவர் கரை ஏறினார். ஆனால் கேசவன் மற்றும் தேவேந்திரா ஆகிய இருவரும்  வெளியே வரமுடியாமல் நீரில் மூழ்கினர். போலீஸார், தீயணைப்பு வீரர்கள் நீரில் மூழ்கி கேசவன், தேவேந்திரா ஆகியோரின் உடல் களை மீட்டனர். ஓசூர் ஹட்கோ போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x