Published : 02 Sep 2018 12:08 AM
Last Updated : 02 Sep 2018 12:08 AM

இடைத்தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போகும் துணை முதல்வர் ஓபிஎஸ் திட்டவட்டம்

“திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலோடு டிடிவி தினகரன் அணி காணாமல் போய்விடும்” என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம், சிவகிரி அருகே உள்ள நெற்கட்டும் செவலில் சுதந்திரப் போராட்ட வீரர்  பூலித்தேவன் 303-வது பிறந்த தினவிழா நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

பூலித்தேவன் வாழ்ந்த நெற்கட்டும்செவல் பகுதி சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டு, அதன்  மேம்பாட்டுக்காக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் தாமிரபரணி புஷ்கரணி விழாவை அரசு விழாவாக நடத்த  ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. ஆறுகளில் கழிவுகள் கலக்கப்படுவதை தடுக்கும் வகையில்,  கழிவுகளை ஆர்.ஓ. முறை மூலம் சுத்திகரிக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில்  தாமிரபரணியிலும்  கழிவுகள் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுதியாக அமைக்கப்படும். டிடிவி. தினகரன் பகல் கனவு கண்டு,  பலவாறு பிதற்றி வருகிறார்.

திருவாரூர் முதல் திருப்பரங்குன்றம் வரை அனைத்து இடைத்தேர்தலிலும் அதிமுக மாபெரும் வெற்றிபெறும். இந்த தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும். அதிமுக தலைமையில்தான் தேர்தல் களத்தில் கூட்டணி ஏற்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x