Published : 24 Aug 2018 03:37 PM
Last Updated : 24 Aug 2018 03:37 PM

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு தினங்களுக்கு மிதமான மழை: வானிலை மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

“தென் தமிழகத்தில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் விழுப்புரம் மற்றும் கோவிலங்குளத்தில் தலா 5 செமீ மழை பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 1 முதல் ஆகஸ்டு 24 வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழையின் அளவு 157 மிமீ. இந்த காலக்கட்டத்தின் இயல்பு அளவு 180 மிமீ.

சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சிறு தூறலாக மழை பெய்யக்கூடும்” என பாலச்சந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x