Published : 24 Aug 2018 10:34 AM
Last Updated : 24 Aug 2018 10:34 AM

22 தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரியாக பதவி உயர்வு

பள்ளிக்கல்வித் துறையில் மாவட்ட கல்வி அதிகாரி பதவியில் 75 சதவீத இடங்கள் பதவி உயர்வு மூலமாகவும், 25 சதவீத இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடி நியமன முறையிலும் நிரப்பப்படுகின்றன.

பதவி உயர்வு பிரிவின்கீழ் வரும் 75 சதவீதத்தில் 40 சதவீதம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்  எஞ்சியுள்ள 30 சதவீதம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ஒதுக்கப்படுகின்றன.

அந்த வகையில், தற்போது அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 22 பேருக்கு மாவட்ட கல்வி அதிகாரிகளாக  பதவி உயர்வு அளித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x