Published : 15 Aug 2018 04:30 PM
Last Updated : 15 Aug 2018 04:30 PM

சுதந்திரத்தைச் சரியான புரிதலுடன் கொண்டாடுகிறோம்: கமல்ஹாசன் மகிழ்ச்சி

தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற கிராமசபைக் கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாகக் கலந்து கொள்வது குறித்து மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது:

தமிழ்நாட்டில் நடைபெறுகின்ற கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் பெரும் திரளாக கலந்துகொள்வதைப் பார்க்கையில் எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.

நமது சுதந்திரத்தை மிகச்சரியான புரிதலுடன் நாம் கொண்டாடுகிறோம்.

இதே போன்று அனைத்து கிராம சபைக்கூட்டங்களிலும், நாம் அனைவரும் விழிப்புடன் கலந்துகொண்டு, நம் நாட்டின் வளர்ச்சியின் எதிரிகளுக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் கவனத்துடன் இருப்போம்.

இவ்வாறு பேசினார் கமல்ஹாசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x