Published : 08 Aug 2018 12:18 AM
Last Updated : 08 Aug 2018 12:18 AM

திராவிடம் என்ற வார்த்தையை நீக்கும் ஆலோசனையை ஏற்க மறுத்த கருணாநிதி

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி எப்போதும் மாநில உரிமைகளை, மாநிலத் தன்னாட்சி உரிமைகள் சார்பாக வாதிட்டவர். கூட்டாட்சிக் கொள்கையை தீவிரமாக வலியுறுத்தி வந்தவர்.

சுதந்திர தினத்தில் முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற உரிமையையும் பெற்றுத் தந்தவர்.

இந்திரா காந்தி கொண்டு வந்த எமெர்ஜென்சி காலக்கட்டத்தில் பிராந்தியக் கட்சிகளையே தடை செய்யும் ஒரு அச்சம் நிலவிவந்தது.

அப்போது திமுகவின் மூத்த தலைவர் வி.ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சிப் பெயரில் உள்ள திராவிட என்ற வார்த்தையை நீக்குமாறும் கருணாநிதியிடம் வலியுறுத்தினர். ஆனால் கருணாநிதி திராவிட என்ற வார்த்தையை நீக்கும் ஆலோசனைகளை ஏற்க மறுத்து கொள்கையில் தீவிரம் காட்டினார்.

இதனை திமுக வரலாறு குறித்து எழுதிய கே.திருநாவுக்கரசு என்பவர் பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x