Published : 06 Aug 2018 10:24 AM
Last Updated : 06 Aug 2018 10:24 AM

3, 4-ம் நிலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கு 11-ம் தேதி தலைவர், துணை தலைவர் தேர்தல்: கூட்டுறவு தேர்தல் ஆணையர் அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில் 3, 4-ம் நிலையில் உள்ள சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு ஆகஸ்ட் 11-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு;

கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஏப்ரலில் முடி வடைந்தது. தொடக்க சங்கங்கள், மத்திய சங்கங்கள், தலைமை சங்கங்கள் என மூன்றடுக்கு முறை அடிப்படையில் 18,775 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர் தல் நடத்த ஆணையம் திட்டமிட்டது. முதல் அடுக்கில் வரும் 18,465 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த மார்ச் 12 முதல் மே 7 வரை 4 நிலைகளாக தேர்தல் நடத்த அறி விப்பு வெளியானது. அதன் அடிப் படையில் தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அனைத்து தேர் தல் நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதையடுத்து அனைத்து தேர்தல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட்டன. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறை யீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் இடைக்கால தடையை விலக்கி, வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவித்தல் தவிர்த்து, இதர அனைத்து தேர்தல் நடவடிக் கைகளையும் மேற்கொள்ள உத்தர விட்டது. இதையடுத்து தேர் தல் நடவடிக்கைகள் மீண்டும் தொடர்ந்து நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுப்பியது. தேர்தல் முடிவுகளை அறிவிக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 3-ம் தேதி உத்தரவிட்டது. சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வில் வழக்கு நிலுவையில் உள்ள சங்கங்களுக்கு மட்டும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புகார்கள், சட்டம் ஒழுங்கு மற் றும் இதர காரணங்களால் தேர்தல் நிறுத்தப்பட்டிருந்த, ரத்து செய்யப் பட்ட, ஒத்தி வைக்கப்பட்ட, பாதியில் நிறுத்தப்பட்டு அந்த நிலையில் இருந்து தொடர ஆணையத்தால் ஆணையிடப்பட்டுள்ள சங்கங்கள் தவிர்த்து அனைத்து சங்கங்களுக் கான தேர்தல் முடிவுகளை அறி விக்க மாவட்ட தேர்தல் அலுவலர் களுக்கும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

2-ம் நிலையில் உள்ள சங்கங் களுக்கு தலைவர், துணைத் தலை வர் தேர்தல் முடிவுகள் இன்று (ஆக.6) அறிவிக்கப்படும். 3, 4-ம் நிலைகளில் உள்ள சங்கங்க ளுக்கு நிர்வாகக் குழு உறுப்பினர் களுக்கான தேர்தல் முடிவுகள் 7-ம் தேதி அறிவிக்கப்படும். 3,4-ம் நிலையில் உள்ள கூட்டுறவு சங்கங் களுக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் 11-ம் தேதி நடத்தப்படும், கூட்டுறவு சங்கங் களுக்கான தேர்தல் ஆணையத் தால் நிறுத்தப்பட்ட, ரத்து செய்யப் பட்ட, ஒத்தி வைக்கப்பட்ட, பாதி யில் நிறுத்தப்பட்ட சங்கங்களுக் கான தேர்தல் அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x