Published : 06 Aug 2018 10:24 AM
Last Updated : 06 Aug 2018 10:24 AM

தமிழகத்தின் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் மற்றும் புதுச்சேரி யில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப் புள்ளது. சென்னை மற்றும் புறநகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகம் மற்றும் எண்ணூரில் 4 செமீ, திருவள்ளூர் மாவட்டம் புழல், செங்குன்றம், சோழவரம், காஞ்சிபுரம் மாவட்டம் காட் டுப்பாக்கம், நீலகிரி மாவட்டம் தேவாலா ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிமீ வேகம் வரை காற்று வீச வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x