Published : 06 Aug 2018 08:48 AM
Last Updated : 06 Aug 2018 08:48 AM

தாராபுரம் அருகே கடன் தொல்லையால் 2 குழந்தை, தாயுடன் விவசாயி தற்கொலை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம், வண்ணாபட்டி யைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் முத்துச்சாமி (38), விவசாயி. இவர் தனது மனைவி செல்வி (28), குழந்தைகள் ராஜலட்சுமி (11), மாணிக்கசத்தியமூர்த்தி (4), தாய் மயிலாத்தாள் (70) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர் கெத்தல்ரேவ் அடுத்துள்ள புதுப்பாளையம் சிவசுப்பிரமணியம் என்பவரது தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வந்தார்.

முத்துச்சாமியின் மனைவி செல்வி தோட்டத்தில் வேலை இல்லாதபோது பனியன் நிறுவனத் தில் வேலைக்கு செல்வது வழக்கம்.

கடந்த சில ஆண்டுகளாக வறட்சியின் காரணமாக முத்துச் சாமி தோட்டத்தில் விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் இல்லாமல் அவதியடைந்து வந்தாராம். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆடு, மாடுகள், கோழிகள் ஆகியவற்றை விற்றுவிட்டார். குத்தகை பணம் கொடுக்க முடியாம லும், குடும்பத்தை பராமரிக்க முடியாததாலும் பலரிடமும் கடன் வாங்கி அந்தக் கடனை முறையாக திருப்பிக் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படு கிறது. இதனால் கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து மனைவி ரங்கம்பாளையத்தில் உள்ள தனது தாய்வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், நேற்று அவரின் வீடு அருகில் உள்ள வேப்ப மரத்தில் முத்துச்சாமியும் அவரது தாய் மயிலாத்தாளும் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தனர். வீட்டினுள் குழந்தைகள் ராஜலட்சுமி, மாணிக்க சத்தியமூர்த்தி ஆகியோ ரும் தூக்கில் சடலமாக கிடந்தனர்.

குண்டடம் போலீஸார் 4 பேரின் சடலங்களை மீட்டு தாராபு ரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x