Published : 24 Jul 2018 09:19 AM
Last Updated : 24 Jul 2018 09:19 AM

சங்கப் பணத்தை முறைகேடு செய்ததாக விசு, பிறைசூடன் மீது காவல் ஆணையரிடம் புகார்

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் பணத்தை முன்னாள் நிர்வாகிகள் விசு, பிறைசூடன் ஆகி யோர் முறைகேடாக பயன் படுத்தியதாக கே.பாக்யராஜ் உள்ளிட்ட தற்போதைய நிர் வாகிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ், பொதுச் செயலாளர் மனோஜ் குமார், பொருளாளர் ரமேஷ் கண்ணா ஆகியோர் சென்னை காவல் ஆணையரிடம் நேற்று ஒரு புகார் கொடுத்த னர். அந்த புகாரில் கூறி யிருப்பதாவது:

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் விசு, செயலாளர் பிறைசூடன், அறங்காவலர் மதுமிதா ஆகியோர் பொதுக்குழு ஒப்புதல் இல்லாமல், தென் னிந்திய திரைப்பட எழுத் தாளர்கள் என்ற பெயரில் புதிய அறக்கட்டளையை தொடங்கி, சங்கத்தின் பணம் ரூ.37 லட்சத்தை அறக் கட்டளைக்கு மாற்றியுள் ளனர்.

கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்று பொறுப் புக்கு வந்திருக்கிறோம். ஆனால், சங்கத்தின் கணக்கு வழக்குகள் தொடர்பான அனைத்து ஆவணங்களை யும் முன்னாள் செயலாளர் கவிஞர் பிறைசூடன் தன் வீட்டுக்கு கொண்டுசென்று விட்டார்.

இதுகுறித்து விசு, பிறை சூடன் ஆகியோரிடம் கேட்ட போது சரியான விளக்கம் அளிக்க மறுக்கின்றனர். சங்கத்தின் பணத்தில் இருந்து தொடங்கப்பட்ட புதிய அறக்கட்டளையில் விசு, பிறைசூடன் ஆகியோர் நிர்வாகிகளாக உள்ளனர். விசு, பிறைசூடன், மதுமிதா ஆகியோர் மோசடி செய்த சங்கப் பணம் ரூ.37 லட்சத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x