Published : 24 Jul 2018 09:12 AM
Last Updated : 24 Jul 2018 09:12 AM
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
அண்டை மாநிலங்களில் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்துள்ளது. அதன் காரணமாக தமிழக பகுதியிலும் மழை வாய்ப்பு குறைந்துள்ளது. இதற்கிடையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில தினங்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான அல்லது இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 4 செமீ, வால்பாறையில் 3 செமீ மழை பதிவாகியுள்ளது.
மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 55 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது கவனமாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ் வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT