Published : 20 Jul 2018 05:13 PM
Last Updated : 20 Jul 2018 05:13 PM
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வரும் நிலையில், கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளது
கடந்த 24 மணிநேரத்தில் நீலகிரியின் தேவாலாவில் 8 செ.மீ. மழையும், கோவையின் வால்பாறையில் 5 செ.மீ மழையும், தேனி பெரியார் மற்றும் கோவை சின்னகல்லாரில் தலா 4 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது'' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT