Published : 20 Jul 2018 04:29 PM
Last Updated : 20 Jul 2018 04:29 PM

மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவேனா? - மு.க.அழகிரி பதில்

தன் அரசியல் பயணம் எப்படி இருக்கும் என்பதை இன்னும் 6 மாதங்களில் அறிவிப்பேன் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை வந்த மு.க.அழகிரியிடம் மீண்டும் தீவிர அரசியலுக்கு வருவீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “இன்னும் 6 மாதங்களில் அறிவிப்பேன்” என்று மட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

திமுக 2016-ம் ஆண்டு தேர்தலில் தோற்ற பிறகு அழகிரிக்கு கட்சிக்குள் நெருக்கடி அதிகரித்தது. அதன்பிறகு அவர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது ஆதரவாளர்கள் ஸ்டாலின் பக்கம் சேர்ந்தனர். அழகிரியும் அரசியலில் ஆர்வமில்லாமல் ஒதுங்கியே இருக்கிறார். அவ்வப்போது திமுகவுக்கு எதிராக அழகிரி கூறும் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தும்

கடந்த சில நாட்களுக்கு முன், பாலமேடு அருகே தன் ஆதரவாளர் மதுரை வீரன் இல்லத் திருமண விழாவில் பேசிய மு.க.அழகிரி, “ஸ்டாலின் செயல்படாத தலைவர். உண்மையான திமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x