Published : 20 Jul 2018 03:07 PM
Last Updated : 20 Jul 2018 03:07 PM
புதுக்கோட்டைக்கு வருகை தந்துள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய திமுகவினர் 677 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டைக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அங்குள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார். பின்னர், அங்கிருந்து புதிய பேருந்து நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அதன்பிறகு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் நரிமேட்டில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து விருந்தினர் மாளிகையில் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற உள்ளார்.
ஆளுநரின் ஆய்வுப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரி எதிரே கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் எஸ்.ரகுபதி, பெரியண்ணன் அரசு, சிவ.வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் உட்பட 677 பேரை கைது செய்து 3 திருமண மண்டபங்களில் தங்க வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT