Published : 20 Jul 2018 08:46 AM
Last Updated : 20 Jul 2018 08:46 AM

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்: அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி உறுதி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று அப்போலோ மருத்துவமனையின்  தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித் துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்போலோ  புற்றுநோய் மருத்துவமனையில் நவீன ஸ்கேனர் வசதியை, அப்போலோ  மருத்துவமனையின்  தலைவர் பிரதாப் ரெட்டி நேற்று அறிமுகப் படுத்தினார்.

அப்போது, நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ  மருத்துவர்களும், செவிலியர்களும் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருவது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த பிரதாப் ரெட்டி, “நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தேவையான  விளக்கங்களை  அளிக்க எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. நாங்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்” என்றார்.

விசாரணை ஆணையத்தில் நேற்று அப்போலோ மருத்துவமனையின் ஆண் செவிலியர் அனீஷ், பெண் செவிலியர் மகேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது. இன்று (ஜூலை 20) ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சசிகலாவின் உதவியாளர் கார்த்திகேயன் ஆகியோரிடம் சசிகலா தரப்பினர் குறுக்கு விசாரணை செய்ய உள்ளனர். மேலும் ஐஏஎஸ் அதிகாரி ராமலிங்கத்திடம் மறு விசாரணையும் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x