Published : 10 Jul 2018 08:43 AM
Last Updated : 10 Jul 2018 08:43 AM

திருடனை பிடிக்க முயன்றபோது காவலருக்கு அரிவாள் வெட்டு: போலீஸார் தீவிர விசாரணை

தாம்பரம் சுரங்கப்பாலம் அருகே செல்போனைப் பறிக்க முயன்ற வழிப்பறித் திருடனைப் பிடிக்க முயன்றபோது காவலர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட திருடனை போலீஸார் தேடி வருகின்றனர்.

தாம்பரம் கிழக்கு எம்இஎஸ் சாலை, லட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஞானசேகர் (32). ஆயுதபடைக் காவலரான இவர் பரங்கிமலை துணை ஆணையர் அலுவலகத்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக ஞானசேகர் சுரங்கப்பாலம் அருகே நடந்து செல்லும்போது ரயில்வே தண்டவாளம் பகுதியில் சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த வழிப்பறித் திருடன் ஞானசேகரிடம் செல்போனைப் பறிக்க முயன்றுள்ளார்.

உடனே ஞானசேகர் திருடனைப் பிடிக்க முயன்றபோது அவர் கையில் அரிவாளால் வெட்டி விட்டு, வழிப்பறித் திருடன் தப்பினார். இதில் வலது கையில் ஞானசேகரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது சம்பவ இடத்துக்கு வந்த சேலையூர் போலீஸார் ஞானசேகரனை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஞானசேகர் சிகிச்சை பெற்று வருகிறார். சேலையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x