Published : 10 Jul 2018 07:46 AM
Last Updated : 10 Jul 2018 07:46 AM

இலங்கை கடற்படை கைப்பற்றிய படகுகளை விடுவிக்க கோரி ராமேசுவரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையால் கடந்த 3 ஆண்டுகளாக கைப்பற்றப்பட்ட 187 படகுகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. மேலும் கடந்த ஒரு வாரத்தில் ராமேசுவரம், மண்டபம் மீனவர்கள் 16 பேர் சிறைபிடிக்கப்பட்டனர்.

இந்நிலையில் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், ‘இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகள், மீனவர்களை விடுவிக்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட எல்லை தாண்டும் வெளிநாட்டு மீனவர்களுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் ஆகியவற்றை வலியுறுத்தி இன்று (10-ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என அறிவிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x