Published : 10 Jul 2018 07:43 AM
Last Updated : 10 Jul 2018 07:43 AM

பேரவை துளிகள்: 25,000 பேருக்கு தலா 25 கோழி

மருத்துவ உதவி தொகை உயர்வு

சட்டப்பேரவையில் நேற்று பொதுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் பழனிசாமி, ‘‘முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மருத்துவ உதவித் தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கப்படும்’’ என்றார்.

25,000 பேருக்கு தலா 25 கோழி

கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், ‘‘தமிழகத்தில் 38,500 பெண்களுக்கு தலா 50 நாட்டுக் கோழிகள் வழங்கப்படும் என பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, இதுவரை 25 ஆயிரம் பெண்களுக்கு முதல்கட்டமாக தலா 25 கோழிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரித்து, மொத்தம் 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக் கோழிகள் வழங்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x