Published : 09 Jul 2018 09:19 AM
Last Updated : 09 Jul 2018 09:19 AM

கருணாநிதியின் உதவியாளர் கே.நித்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து பேனர், போஸ்டர்கள்: திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் கே.நித்யாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து சென்னை மாநகரின் பல இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பவர் கே.நித்யா. கருணாநிதிக்கு தேவையான உதவிகளை செய்து வருபவர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 டிசம்பர் முதல் வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வெடுத்து வருகிறார். அவருக்கு உடல்நிலையில் பிரச்சினை ஏற்படுவதற்கு முன்பிருந்தே உடனிருந்து, நித்யா பல உதவிகள் செய்து வந்தார்.

பொதுவாக கருணாநிதியின் உதவியாளராக இருப்பவர்கள் பொதுவில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டார்கள். வெளிப்படையான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட மாட்டார்கள்.

ஆனால், கடந்த 7-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய நித்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. குறிப்பாக பல்லாவரம் பகுதியில் நூற்றுக்கணக்கான போஸ்டர்களைக் காண முடிந்தது. இதில் ஆளுயர மாலையுடன் அரசியல் தலைவர் போல அவர் காட்சி தருகிறார். இது திமுகவினரிடையே பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக திமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “கருணாநிதியின் நீண்டகால உதவியாளர் என்பதால் திமுகவினருக்கு நித்யா மீது ஒருவித மதிப்பும், மரியாதையும் உண்டு. அந்த அடிப்படையில் யாராவது அவருக்கு போஸ்டர்கள் அடித்திருக்கலாம். மற்றபடி அவர் திமுகவில் எந்தப் பொறுப்பிலும் இல்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x