Published : 09 Jul 2018 08:20 AM
Last Updated : 09 Jul 2018 08:20 AM
தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது என எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் தீபா குற்றம்சாட்டினார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம், 8 வழி பசுமை சாலைத் திட்டம் உட்பட அனைத்தும் மக்களுக்கு விரோதமாகவே உள்ளது. எனவே, நல்லது நடக்க வேண்டுமெனில் இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும்.
கமல்ஹாசன், ரஜினிகாந்த் அரசியலில் இன்னும் முழு செயல்பாட்டுக்கு வரவில்லை. தேர்தல் வந்த பிறகே அந்தக் கட்சிகளின் நிலைப்பாடு, மக்களிடம் அவர்களுக்கு எப்படி வரவேற்பு இருக்கிறது என்று தெரியவரும்.
அதிமுக ஜெ.தீபா அணி என்று தேர்தல் ஆணையத்தால் எங்களுக்கு அங்கீகாரம் தரப்பட்டுள்ளது. கழகமாக மாற்றுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT