Published : 06 Jul 2018 07:53 AM
Last Updated : 06 Jul 2018 07:53 AM

7 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று, தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்துதல் மசோதாவை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தனியார் சட்டக்கல்லூரிகள் நிறுவுதல் மசோதாவை அமைச்சர் சி.வி.சண்முகம், சிவ்நாடார் மற்றும் சாய் பல்கலைக்கழகங்கள் மசோதாக்களை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கொண்டு வந்தனர். கரும்பு கொள்முதல் விலையை ஒழுங்குபடுத்தும் மசோதாவை அமைச்சர் இரா. துரைக்கண்ணுவும், நிலச் சீர்திருத்த மசோதாவை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கொண்டுவந்தனர். வன்னியகுல சத்திரியர் அறநிலை பொறுப்பாட்சிகள் மற் றும் நிலக்கொடைகள் மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x