Published : 30 Jun 2018 12:30 PM
Last Updated : 30 Jun 2018 12:30 PM
அதிகரிக்கும் வாகன விபத்துகளினால் மக்கள் உயிரிழப்பைத் தடுக்கவே 8 வழிச்சாலைத் திட்டம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது கூறியதாவது:
மாநிலத்தின் வளர்ச்சிக்கு தக்கவாறு சாலைகளை மாற்ற வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இந்த திட்டம் முழுமையாக நிறைவேற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும். மத்திய அரசின் இந்த 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உதவி செய்கிறது.
நிலம் அளிக்கும் உரிமையாளர்களுக்கு தகுந்த இழப்பீடு பெற்று தரப்படும். அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய சாலையாக சென்னை, சேலம் இடையேயான 8 வழிச்சாலை இருக்கும். அதிகரிக்கும் வாகன விபத்துக்களால் மக்கள் உயிரிழப்பை தடுக்கவே இந்த 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன.
என்றார் முதல்வர் பழனிசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT