Published : 30 Jun 2018 10:22 AM
Last Updated : 30 Jun 2018 10:22 AM
சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்புக்கு நடிகர் பிரபு மற்றும் நடிகர் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடிகர் பிரபு சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “சிவாஜி கணேசன் பிறந்த நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்பட உள்ளதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடை கிறேன். இந்நேரத்தில் தமிழக முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப் பேரவையில் இதுதொடர்பாக பேசிய சகோதரர் ஸ்டாலின், சட்டப்பேரவை உறுப்பினர் வாகை சந்திரசேகருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது எங்களது விருப்பம் என்பதை விட தமிழக மக்களின் விருப்பமாகும்” என்றார்.
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கலை சேவையைப் பாராட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள் ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோரும் தமிழக அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாடு சிவாஜி மன்ற ஒருங்கிணைப்புக் குழுவும் இதற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துள் ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT