Published : 30 Jun 2018 08:08 AM
Last Updated : 30 Jun 2018 08:08 AM

தமிழகத்தில் தேர்தலை கண்டு ஆளும் கட்சி அஞ்சுகிறது: முத்தரசன் குற்றச்சாட்டு

உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. தேர்தலை கண்டு ஆளும் கட்சி அஞ்சுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

விருதுநகரில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலை மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பது ஜனநாயகத்துக்கு ஏற்புடையது அல்ல. தேர்தலை கண்டு ஆளும் கட்சி அஞ்சுகிறது. விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்துக்கு மக்களின் கருத்துகளை கேட்காமல் வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறையினரை கொண்டு மிகக்கடுமையாக நிலம் கையகப்படுத்தப்படுவதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

நீட் தேர்வு, காவிரி நீர் பிரச்சினை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை, சேலம்-சென்னை 8 வழிச் சாலை எனப் பல பிரச்சினைகள் மக்களுக்கு எதிராக வரும்போது அரசை விமர்சித்து பலர் பல போராட்டங்களை நடத்துகிறார்கள். இதில் இருந்து தப்பிக்க அடக்குமுறையை அரசு கையாளுகிறது. தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளைக் கைவிடக்கோரி ஜூலை 5-ம் தேதி சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போரா ட்டம் நடைபெறுகிறது. இதை திமுக செயல் தலைவர் ஸ்டா லின் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x