Published : 30 Jun 2018 08:00 AM
Last Updated : 30 Jun 2018 08:00 AM

ஐ.ஜி.க்கள் 4 பேருக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு: 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தாமரைக்கண்ணன் உட்பட போலீஸ் ஐ.ஜிக்கள் 4 பேருக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

காவல் துறை தொழில்நுட்ப சேவை பிரிவு ஐ.ஜி. யாக உள்ள அசோக்குமார் தாஸ், சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வு பிரிவு ஏடிஜிபி யாகவும், சென்னை ஆயுதப் பிரிவு ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், காவல் துறை போக்குவரத்து கழக ஏடிஜிபியாகவும் பதவி உயர்வு பெற்று நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கடலோர பாதுகாப்பு குழும ஐ.ஜி. அருணாச்சலம், ராமநாதபுரம் மண்டபம் அகதிகள் முகாம் ஏடிஜிபியாகவும், குற்றப்பிரிவு சிஐடி ஐ.ஜி. பி.தாமரைக்கண்ணன், காவலர் நலன் பிரிவு ஏடிஜிபியாகவும் பதவி உயர்வுடன் நியமிக்கப் பட்டுள்ளனர்.

காவலர் நலன் பிரிவு ஏடிஜிபியாக இருந்த ராஜூவ் குமார், சென்னை ஊர்க்காவல்படை ஏடிஜிபியாகவும், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால், சென்னை குற்றப்பிரிவு சிஐடி ஐ.ஜி.யாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழக ஏடிஜிபி என்.தமிழ்செல்வன், காவலர் தொழில்நுட்ப சேவை பிரிவு ஏடிஜிபியாகவும் காவலர் தொழில்நுட்ப சேவை பிரிவு ஏடிஜிபி எம்.என்.மஞ்சுநாதா, காவலர் வீட்டு வசதிக் கழக ஏடிஜிபியாகவும் மாற்றப்பட்டுள்ள னர்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x