Published : 30 Jun 2018 07:58 AM
Last Updated : 30 Jun 2018 07:58 AM
தமிழக பாடப் புத்தகங்களில் கிமு, கிபி என்பது தொடரும் என சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் பேசிய அதிமுக உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை (ராதாபுரம்), காங்கிரஸ் உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்) ஆகியோர், ‘‘தமிழக பாடப் புத்தகங்களில் கிமு (கிறிஸ்து பிறப்புக்கு முன்பு), கிபி (கிறிஸ்து பிறப்புக்கு பின்பு) என்பதற்குப் பதிலாக பொது ஆண்டுக்கு முன்பு (பொ.ஆ.மு.), பொது ஆண்டுக்குப் பின்பு (பொ. ஆ.பி) என மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இதனால் சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, வரலாற்றை மாற்றாமல் கிமு, கிபி என்பதையே தொடரச் செய்ய வேண்டும்’’ என்றனர். அதற்குப் பதில் அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘‘தமிழக பாடப் புத்தகங்களில் கிமு, கிபி என்பது தொடரும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT