Published : 29 Jun 2018 10:49 AM
Last Updated : 29 Jun 2018 10:49 AM
தமிழக பாஜக தலைவர் பொறுப்பில் மாற்றம் வர உள்ளதா என்பது குறித்து, அக்கட்சியின் தமிழக விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் பொதுச் செயலாளர் முரளிதர ராவ் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அண்மைக் காலமாக அப்பதவியில் இருந்து தமிழிசை சவுந்தரராஜன் நீக்கப்பட்டு வேறொருவர் அமர்த்தப்படலாம் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வந்தது.
இதையடுத்து, அவருடைய பதவிக்காலம் 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை உள்ளதாகவும், வேறொரு தலைவரை நியமிப்பது குறித்து கட்சித் தலைமை தான் முடிவெடுக்கும் எனவும் தமிழிசை தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவும் கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக பாஜக விவகார பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், “பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம் நான் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் மாற்றம் வரும் என ஒரு சில ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் உண்மையில்லை. அந்த கருத்துகள் உண்மைக்குப் புறம்பானது மற்றும் விஷமத் தன்மை வாய்ந்தது” என பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT