Published : 29 Jun 2018 10:02 AM
Last Updated : 29 Jun 2018 10:02 AM
தியாகராய நகரில் சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர்களை கண்காணிப்பு கேமராவின் உதவியால் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை தியாகராய நகர் தெற்கு போக் சாலையில், அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் என்பவர் கடந்த 12-ம் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 கொள்ளையர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த செல்போனைப் பறித்துச் சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
அந்த வீடியோ பதிவை வைத்து மாம்பலம் போலீஸார் நடத்திய விசாரணையில் நியமதுல்லா, கார்த்திக் ஆகியோர் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT