Published : 29 Jun 2018 08:13 AM
Last Updated : 29 Jun 2018 08:13 AM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஏப்.10-ல் சென்னை சேப்பாக்கம் மைதானம் முன்பாக பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டபோது போலீஸாரை தாக்கியதாக திரைப்பட இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவானது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கவுதமனை போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து, அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுபாதேவி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT