Published : 29 Jun 2018 08:04 AM
Last Updated : 29 Jun 2018 08:04 AM
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் உளவுத் துறை ஐஜி கே.என்.சத்தியமூர்த்தி நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும், இறந்தபோதும் உளவுத் துறை ஐ.ஜியாக இருந்தவர் கே.என்.சத்தியமூர்த்தி. இதனால் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்ற அடிப்படையில், அவருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது.
அதன்படி, விசாரணை ஆணைய நீதிபதி ஆறுமுகசாமி முன்பு, ஐஜி கே.என்.சத்தியமூர்த்தி நேற்று நேரில் ஆஜரானார். அவரிடம் சுமார் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெயலலிதாவின் பாதுகாப்பு தொடர்பாக அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.
‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியர் குருமூர்த்தியும் நேற்று (28-ம் தேதி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால், நேற்று அவர் ஆஜராகவில்லை. இன்னொரு நாளில் அவர் ஆஜராவார் என்று கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT