Published : 29 Jun 2018 07:58 AM
Last Updated : 29 Jun 2018 07:58 AM
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட நடவடிக்கைகளை விளக்கி மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக மதிமுக நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வைகோ மனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திலும் புகார் தெரிவித்தார்.
இந்நிலையில், இதுதொடர்பான நடவடிக்கைகளை விளக்கி, தமிழக மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் லிவிங்ஸ்டன் கடிதம் எழுதியுள்ளார். அதன் நகலை மாசு கட்டுப்பாடு வாரியம் வைகோவுக்கு அனுப்பியுள்ளது. அதில், “வேதாந்தா குழுமத்தினர், தங்கள் உரிமத்தை புதுப்பிக்கக் கோரி அளித்த விண்ணப்பத்தை மாசு கட்டுப்பாடு வாரியம் கடந்த ஏப். 9-ம் தேதி ஏற்க மறுத்துவிட்டது. அதோடு, ஆலையை இயக்கக்கூடாது என ஏப்ரல் 12-ம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, மே 24-ம் தேதி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு, மே 28-ம் தேதி ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT