Published : 25 Jun 2018 09:03 AM
Last Updated : 25 Jun 2018 09:03 AM
ஏரிகாத்த கோதண்டராமர் கோயி லில் ஆனி மாத பிரம்மோற்சவத்தையொட்டி, கருணாகரப் பெரு மாள் கருட வாகனத்தின் மீது வீதியுலா வந்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் நகரில் பிரசித்தி பெற்ற ஏரிகாத்த கோதண்டராமர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், ஆனி மாத பிரம்மோற்சவம் கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங் கியது.
10 நாட்கள் நடைபெற்ற உற்சவத்தின் மூன்றாம் நாளான நேற்று கருடசேவை உற்சவம் நடைபெற்றது. இதில், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தின் மீது கருணாகரப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT