Published : 25 Jun 2018 08:51 AM
Last Updated : 25 Jun 2018 08:51 AM

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையன் நாதுராமின் செல்போன் பறிமுதல்: வெளிநாட்டு கைதிகளிடமும் சிக்கின

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கொள்ளையன் நாதுராமிடம் இருந்து செல்போனை சிறை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை புழல் சிறையில் கடந்த 20-ம் தேதி ரவுடி பாக்ஸர் முரளி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து புழல் சிறையில் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் சிறைக் காவலர்கள் சோதனை செய்து வருகின்றனர்.

கொளத்தூரில் நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கிலும், காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கிலும் கைதாகியுள்ள கொள்ளையன் நாதுராம், புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது அறையில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட சோதனையில் ஒரு செல்போன் சிக்கியது. விசாரணையில் அதை நாதுராம் பயன்படுத்தி வந்தது தெரிந்தது.

மேலும், வெளிநாட்டு கைதிகள் அடைக்கப்பட்டிருந்த அறைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 5 செல்போன்கள் சிக்கின. அவற்றை சிலர் மண்ணில் புதைத்து வைத்திருந்தனர். மேலும், கழிவறையின் மறைவிடங்களில் இருந்து, சிம் கார்டுகள், செல்போன் பேட்டரிகளை சிறைக் காவலர்கள் கைப்பற்றினர்.

செல்போன்கள் கைப்பற்றப்பட்டது குறித்து போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி புழலில் அடைக்கப்பட்டு உள்ள கொலம்பியாவைச் சேர்ந்த எட்வின், நாதுராம் மற்றும் சில கைதிகளிடம் சிறைக் காவலர்கள், தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x