Published : 25 Jun 2018 08:50 AM
Last Updated : 25 Jun 2018 08:50 AM
சர்வதேச யோகா தினத்தையொட்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் கடந்த 4 நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் மொத்தம் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறிய தாவது:
சர்வதேச யோகா தினத்தையொட்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் கடந்த 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காலை மற்றும் மாலை நேரங்களில் யோகா மற்றும் தியானப் பயற்சி இலவசமாக அளிக்கப்பட்டது. பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சுத்தவெளிசபை தியானப் பயிற்சி மையத்துடன் இணைந்து நடத்தும் க்ரியா மற்றும் யோகாசனங்கள் அடிப்படையில் இந்த யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தலா 40 பேர் பங்கேற்றனர். தினமும் ஒரு மணிநேரம் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டன. எழும்பூர், சைதாப்பேட்டை, ஆலந்தூர், வடபழனி, அண்ணாநகர், திருமங்கலம் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட பயற்சிகளில் மொத்தம் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பலனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT