Published : 23 Jun 2018 04:29 PM
Last Updated : 23 Jun 2018 04:29 PM

எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கின்றனர்? மீம்ஸ் கிரியேட்டர்களை வாழ்த்திய அமைச்சர் ஜெயக்குமார்

என்னைப் பற்றிய மீம்ஸ்களை ஜாலியாக எடுத்துக் கொள்கிறேன் என, தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் இன்று (சனிக்கிழமை) நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “சமூக வலைதளங்களில் என்னை விமர்சித்தே அதிகளவில் மீம்ஸ்கள் போடுகின்றனர். என் மண்டையில் கிரிக்கெட் விளையாடுவது போல் மீம்ஸ் போடுகின்றனர். பிரதமர் மோடி என் தலையில் அமர்ந்து யோகா செய்வது போல் மீம்ஸ் உருவாக்குகின்றனர். இவற்றையெல்லாம் ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வளவு சிந்தித்து நேரம் செலவழித்து மீம்ஸ் உருவாக்குபவர்களை நான் வாழ்த்துகிறேன்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

அதன்பின், பாடல் ஒன்றில் தன் புகைப்படத்தை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸை ஜெயக்குமார் விளக்கினார். அப்போது பேசிய அவர், “அந்த மீம்ஸ் எனக்குப் புரியாததால் நானே என் நண்பர்களுக்கு அனுப்பி விளக்கம் பெற்றுக்கொண்டேன். சிலவற்றை வெளியில் சொல்வதற்கு சங்கடமாக உள்ளது. எப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிக்கின்றனர்” என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x