Published : 23 Jun 2018 09:55 AM
Last Updated : 23 Jun 2018 09:55 AM

கமல் அரசியலில் நீடிக்க மாட்டார்: மைத்ரேயன் கணிப்பு

திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்கப் பொதுக்கூட்டம், மத்திய மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில், அதிமுகவின் அமைப்பு செயலாளர் மைத்ரேயன் கலந்துகொண்டு பேசினார்.

பின்னர், செய்தியாளர்களிடையே மைத்ரேயன் கூறியதா வது: முதல்வர் பழனிசாமியின் ஆட்சி 21 நாட்களே நீடிக்கும் என டிடிவி. தினகரன் கூறினார். ஆனால், தீர்ப்பு அதிமுகவுக்கு சாதகமாக வந்து, பாதிப்பு இன்றி ஆட்சி நீடிக்கிறது. கமல்ஹாசன் மக்களைச் சந்திப்பதற்கு பதிலாக தலைவர்களைச் சந்திக்கிறார்.

மக்களை மட்டுமே நம்பியுள்ள அதிமுகவுக்கு சவாலாக யாரும் இருக்க முடியாது. வரும் தேர்தல் வரையாவது அரசியலில் கமல்ஹாசன் நீடிப்பாரா என்பது சந்தேகமே.

எய்ம்ஸ் மருத்துவமனைக்காக தமிழக அரசு 5 இடங்களை மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. மத்திய நிபுணர்கள் குழு 5 இடங்களையும் பார்வையிட்டு மதுரையைத் தேர்வு செய்துள்ளது. இந்த ஆண்டு மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனை, அடுத்த ஆண்டு தஞ்சாவூரில் அமையும்.

இவ்வாறு மைத்ரேயன் தெரி வித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x