Published : 23 Jun 2018 09:47 AM
Last Updated : 23 Jun 2018 09:47 AM

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரு பக்கங்களிலும் லிப்ட் வசதி: தெற்கு ரயில்வே ஒப்புதல்

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் லிப்ட் வசதியை ஏற்படுத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்திருப்பதாக ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.

இருபுறமும் லிப்ட் வசதி

இதுதொடர்பாக நேற்று அவர் கூறியதாவது:

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் லிப்ட் வசதி இல்லாத தால் வயதானவர்கள, நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். எனவே, நுங்கம்பாக்கம் ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டருக்கு எளிதாகச் செல்ல ரயில் நிலையத்தின் இருபுறமும் லிப்ட் வசதியை ஏற்படுத்தித் தருமாறு ரயில்வே பொதுமேலாளரை நேரில் சந்தித்து தொகுதி எம்எல்ஏ என்ற முறையில் கோரிக்கை விடுத்திருந்தேன்.

அதனைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே முதன்மைப் பொறியாளர் ஏ.கே.சின்கா, கடந்த 14-ம் தேதி எனக்கு எழுதிய கடிதத்தில், ‘‘நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் உள்ள படிக்கட்டுகளுக்கு மாற் றாக இருபுறமும் லிப்ட் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித் துள்ளார்.

மேம்பாலம் அமைக்கும் பணி

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து லயோலா கல்லூரியை ஒட்டியுள்ள நடைபாதை வழியாகச் செல்லும் பொதுமக்கள் சாலையைக் கடக்க பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

இதனைத் தவிர்க்க லயோலா கல்லூரி சுற்றுச் சுவரிலிருந்து எதிர்புறம் சாலையைக் கடக்க சேவை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது. இதற்குத் தேவையான இடத்தை லயோலா கல்லூரி நிர்வாகம் வழங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து சேவை மேம்பாலம் அமைக்கும் பணிகள் கடந்த 21-ம் தேதி தொடங்கப்பட்டுள் ளன.

இவ்வாறு கு.க.செல்வம் கூறி னார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x