Published : 23 Jun 2018 07:45 AM
Last Updated : 23 Jun 2018 07:45 AM

மேலும் ஒரு வழக்கில் வேல்முருகனுக்கு முன்ஜாமீன்

திண்டுக்கலில் டாஸ்மாக் லாரிக்கு தீ வைத்த வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் எரியோடு டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபானங்களை ஏற்றிச்சென்ற லாரி ஜூன் 1-ம் தேதி தீ வைத்து எரிக்கப்பட்டது. இது தொடர்பாக வேல்முருகன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு வேல்முருகன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மதுபான லாரி எரிப்பு வழக்கில் மனுதாரருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டு, அதுவரை வேல்முருகனை கைது செய்ய இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x