Published : 23 Jun 2018 07:39 AM
Last Updated : 23 Jun 2018 07:39 AM

‘இ-சேவை மையம் தற்காலிகமாக இயங்காது’: தமிழக மின் ஆளுமை துறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்கள் இன்று மாலை 3 மணி முதல் இயங் காது என்றும், திங்கள்கிழமை வழக்கம் போல் இயங்கும் என் றும் மின் ஆளுமை ஆணையர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர்நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின்கீ்ழ் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வறுமை ஒழிப்பு சங்கங்கள், சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதாரத் திட்டம் மற்றும் கிராம தொழில் முனைவோர் அரசு இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.

தமிழகம் முழுவதும் 10,423 அரசு இ-சேவை மையங்கள் உள்ளன. இவற்றில் சர்வர் பராமரிப்புப் பணி காரணமாக ஜூன் 23-ம் தேதி (இன்று) பிற்பகல் 3 மணி முதல் இயங்காது. திங்கள்கிழமை (25-ம் தேதி) முதல் வழக்கம் போல் செயல் படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x