Published : 23 Jun 2018 07:34 AM
Last Updated : 23 Jun 2018 07:34 AM
‘ஸ்பேஸ் கிட்ஸ்’ இந்தியா அமைப்பு சார்பில் நிலவை ஆய்வு செய்யும் வகையில் தயாரிக்கப்பட உள்ள சிறிய ரக ரோவரை விண்ணுக்கு அனுப்ப மத்திய, மாநில அரசு உதவ வேண்டும் என அந்த அமைப்பின் நிறுவனர் ஸ்ரீமதிகேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறிவியல் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள இளம் மாணவர்களை பல்வேறு வகைகளில் ஊக்குவித்து வருகிறோம். மாணவர்களிடையே இதுதொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, அவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பத்தில் சர்வதேச அனுபவங்களையும் அளித்து வருகிறோம். எங்கள் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய உலகிலேயே மிகவும் எடை குறைந்த ‘கலாம்சாட்’ செயற்கைக்கோளை கடந்த ஆண்டு விண்ணுக்கு அனுப்பினோம்.
அதைத்தொடர்ந்து நிலவை ஆய்வு செய்யும் மிகவும் எடை குறைந்த ரோவரை உருவாக்கும் முயற்சியில் எங்கள் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அந்த ரோவருக்கு ‘புஷ்பக விமானம்’ என பெயரிட உள்ளோம். நிலவில் தரையிறக்கப்பட்டபிறகு அங்கிருந்து புகைப்படங்கள், வீடியோக்களை இந்த ரோவர் மூலம் பெற முடியும். வரும் 2019-ம் ஆண்டு இறுதியில் அந்த ரோவரை விண்ணுக்கு அனுப்ப திட்டமிடப்பட் டுள்ளது.
இதற்காக ரூ.250 கோடி முதல் ரூ.300 கோடி வரை செலவாகும். எனவே, ரோவரை உருவாக்குவதற்கான ஆய்வகம் அமைக்கவும், விண்ணுக்கு ரோவரை அனுப்பவும் மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT